Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவையில் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள்! - மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:39 IST)
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், அதில் நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களும், நீதிபதிகளும் பலர் உள்ள நிலையில் நாள்தோறும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வண்ணம் உள்ளன. பல வழக்குகள் பல ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருப்பதும் உண்டு.
 
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் 72,062 வழக்குகளும், மாநில உயர்நீதிமன்றங்களில் சுமார் 59 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் சுமார் 4.19 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆண்டுதோறும் மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments