Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள..... மருத்துவர்கள் அறிவுரை

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (14:41 IST)
கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாவது:

விரையில் இந்தியாவில் வரவுள்ள கொரொனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள 2 ஆம் தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தினால் மட்டும்தான் 33% நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும்  2 வது தவணை போட்டிருந்தால் 90% மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments