Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (07:58 IST)
டெல்லியில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் கடந்த செப்டம்பர் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தை பொருத்தவரை தினமும் 7 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது/ டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தும் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 5 ஆயிரத்து 673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெல்லியில் நேற்று மட்டும் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்தனர் என்பதும் டெல்லியில் மொத்த பலி 6396 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments