Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு! – மீண்டும் உயர்ந்த பாதிப்புகள்!

Advertiesment
இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு! – மீண்டும் உயர்ந்த பாதிப்புகள்!
, புதன், 23 ஜூன் 2021 (09:33 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மொத்த பாதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,358 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,90,660 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,43,194 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்!