Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகர் டெல்லியில் தலைத்தூக்கும் கொரோனா!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (12:04 IST)
தற்போது மீண்டும் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,109 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,33,067 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட ஒமைக்ரான் பரவல் குறைந்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் உயிரிழந்திருந்தார். எனினும், இன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments