Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (17:47 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்முவில் ஒருவருக்கும், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கும், டெல்லியில் மூன்றாவதாக ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் இத்தாலியில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலிய பயணிகள் 16 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேர் குணமடைந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments