பாஜகவின் பழி வாங்கும் படலம் - நேஷனல் ஹெரால்டு குறித்து காங். விமர்சனம்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (13:17 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி.  
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கடந்த நான்கு நாட்களில் 38 மணி நேரம் விசாரணை செய்துள்ளதாகவும் இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனையடுத்து இன்று 5வது நாளாக ராகுல்காந்தி ஆஜராவார் என்றும் அனேகமாக இன்றுடன் அவரிடம் விசாரணை முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியை விசாரணை செய்துவரும் அமலாக்கத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் செய்து வருகின்றனர். 
 
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது சமீபத்திய பேட்டியில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் யாருக்கு கைமாற்றப்பட்டது என அமலாக்கத்துறை விளக்க வேண்டும் எனவும் ராகுல் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை மூலம் பாஜக பழிவாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments