Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றார் அண்ணாமலை: காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:02 IST)
கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் அண்ணாமலை ஹெலிகாப்டரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியல் வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார் என்பதும் அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் கட்சியின் வினய்குமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதற்கு பதில் அண்ணாமலை அளித்துள்ளபோது, ‘கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன் என்றும் தோல்வி வயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் காட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments