Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு..! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

Senthil Velan
புதன், 6 மார்ச் 2024 (13:30 IST)
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  அதன்படி,  வரும் மே மாதம் 26-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.

சுமார் 1,056 இடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் நிறைவடைய இருந்தது.  கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

ALSO READ: 'நீங்கள் நலமா' திட்டம் தொடக்கம்..! புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

இந்த நிலையில், சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments