Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை நட்சத்திரம்! – மக்கள் வேதனை!

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (19:40 IST)
ஆந்திர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பிரபல குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா தனியார் தொலைக்காட்சியில் வெளியான குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர். பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்து காட்டி மக்களை சிரிப்பலையில் மூழ்க செய்தவர் சாய் கிருஷ்ணா.

சிலநாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாய் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் அதிகரித்து வரவே உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் போகும் வழியிலேயே கோகுல் சாய் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த சிறுவன் இப்படி காய்ச்சலால் பரிதாபமாக இறந்த சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments