Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (11:33 IST)
அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில், சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூருக்கு மதியம் 1:35மணிக்கு புறப்பட்டு, இரவு 7:55 மணிக்கு பெங்களூரை அடையும். அதன் பின் இரவு 10 மணிக்கு மைசூரை அடையும்.  இந்த ரயில், 23 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அதிவிரைவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரயிலின் வேகம் 55 கிலோ மீட்டர் என்று இருந்த நிலையில், வேகம் குறைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
அதே நேரத்தில், சாதாரண ரயிலாக மாற்றப்பட்ட பிறகு, இரண்டாம் வகுப்பு இயற்கைக்கு ரூ.15 மற்றும் சேர் கார் இருக்கைக்கு ரூ.45 கட்டணம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் கட்டணமும் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments