Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆவது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (12:29 IST)
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்று வட்டபாதையில் 3 ஆவது நிலைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்றுவட்டபாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன் படி சந்திரயான் 2 திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இயக்கப்பட்டது.

அதில் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சேர்க்கப்பட்டது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 நிலைகளை கொண்ட இந்த விண்கலம், நிலவின் மூன்றாவது நிலைக்கு முன்னேறியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, அதிகாலை 1.55 மணியலவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதமாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments