Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரா ஒன்றும் தமிழகம் இல்லை...

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (12:45 IST)
தமிழகத்தை போல ஆந்திராவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது. மேலும், மக்களவையில் இருந்து தனது கட்சியின் எம்பிக்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். 
 
எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு கண்டுக்கொள்வதாய் இல்லை. இதையடுத்து ஆந்திர நலனுக்காக நேற்று இந்திராகாந்தி மைதானத்தில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். 
தெலுங்கு தேச கட்சி அமைச்சர்களும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தை நடத்தினர். இந்நிலையில், இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டு கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதை எப்போதும் நடத்த விடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, தமிழக ஆளும் கட்சியினர் மத்திய அரசுக்கு கைப்பாவையாக இருப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பலர் வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments