Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: சிகிச்சை பலனின்றி இந்திய வீரர் பலி

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (12:41 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் சரண்ஜீத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த 17ம் தேதி பாகிஸ்தான் படையினர் அத்துமீறி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் சரண்ஜித் சிங் படுகாயம் அடைந்தார்.
 
பின்னர் காயமடைந்த அவரை ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
 
இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் படையினர் 650 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 31 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments