Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் கல்வியாண்டில் முழுவதும் ஆன்லைன் வகுப்பா? – மத்திய அமைச்சர் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (08:31 IST)
கொரோனா காரணமாக தற்போது பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடந்து வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்பாக மாற்றப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிலும் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளே நடைபெறலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அடுத்த கல்வி ஆண்டில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளாக நடத்த வாய்ப்பில்லை. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டும் கலந்து நடத்தப்படலாம் என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் ஜெஇஇ போன்ற தேர்வுகளையும் பிராந்திய  மொழிகளிலேயே நடத்தவும், பல்வேறு தொழிற்கல்வியையும் பிராந்திய மொழிகளில் கொண்டு வர திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments