Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை வறுத்தெடுக்கும் வெயில்! – மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (08:42 IST)
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து மக்களை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் “மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப ஆஸ்பத்திரிகள் வசதிகளை பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் இயக்க தடையற்ற மின்சார வினியோகம், சோலார் தகடுகளை நிறுவுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க குளிரூட்டும் கூரைகள், ஜன்னல் மறைப்புகள் ஆகியவற்றை நிறுவ வேண்டும்.

மேலும் வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகளை சரிசெய்ய தேவையான மருந்துகள், ஐவி திரவம் உள்ளிட்டவை போதிய அளவில் கையிருப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments