Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? – சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:46 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி குறித்த சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்தை எட்டியுள்ளன. மாநிலங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர். ஆனால் அதே சமயம் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆண்களுக்கும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து மத்திய சுகாதாரத்துறை “கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவோ, மலட்டு தன்மையை ஏற்படுத்துவதாகவோ எந்த வித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments