Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் ஈடுபட்டால் முன் கூட்டியே ஓய்வு! – அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (09:03 IST)
ஊழலில் ஈடுபடும் மற்றும் செயல்திறன் குறைவாக உள்ள பணியாளர்களுக்கு முன் கூட்டிய ஓய்வு அளிப்பது குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் பணியிடங்களில் பணிபுரிபவர்கள் பணி ஓய்வு குறித்த சுற்றறிக்கை ஒன்றை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு ஊழியர் 50 அல்லது 55 வயதை எட்டிவிட்டாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தாலோ அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் செயல்திறமையற்றவராகவோ அல்லது ஊழலில் ஈடுபட்டவராகவோ இருந்தால் பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கு அரசியலமைப்பில் அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்கூட்டியே ஓய்வு பெற செய்ய வேண்டிய அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அல்லது 3 மாத சம்பளம் மற்றும் படிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியம் அவர்களுக்கு உண்டு என்றும் அந்த சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments