Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் இல்லாம நீலகிரிக்குள்ள நுழைய முடியாது! – கலெக்டர் அதிரடி உத்தரவு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:29 IST)
தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் நீலகிரிக்குள் இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் தற்போதைய தளர்வுகளில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணமாக கொண்டு நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பலர் நீலகிரிக்கு பயணிக்க தொடங்கியதால் இறப்பு, திருமண நிகழ்வு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக மட்டும் இ-பாஸ் பெறும் பழைய நடைமுறையை நீலகிரியில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நீலகிரியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்