Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய வரி நீக்கம்! – மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:19 IST)
இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதி உள்ள மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் பிரித்தளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆக்ஸிஜன் தேவை கருதி ஆக்ஸிஜன் இறக்குமதிக்கான கலால் வரி, சுகாதர செஸ் வரி ஆகியவற்றை 3 மாதங்களுக்கு நீக்குவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments