Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரம் – பாராட்டுகளை தெரிவித்த பிரபலங்கள்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:13 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்டாக்ராமில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் “நீண்ட நாட்கள் கழித்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது, வரலாற்றில் தீவிரவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கான முக்கியமான முடிவாகும். திரு மோடி அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மதுர் பண்ட்டெர்கர் “வரலாற்று தருணம். 370 நீக்கப்பட்டது. தைரியமான முயற்சி” என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் சேதன் பகத் “ஆகஸ்டு 5, 2019. காஷ்மீர் கடைசியாக விடுதலையானது. வளர்வதர்கான சுதந்திரம், எதிர்காலத்திற்கான சுதந்திரம். சட்டப் பிரிவு 370 போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments