Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மிரட்டலா? துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (06:05 IST)
சமீபத்தில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை  தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அவருக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சிவபால் சிங் லாலு பிரசாத்துக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் நீதியை நிலைநிறுத்தும் வகையில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சிவபால்சிங்.

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் கைத்துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு மிக விரைவில் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments