Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் மகன் குத்திப் படுகொலை - பீகாரில் பயங்கரம்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (09:12 IST)
பீகாரில் பாஜக தலைவரின் மகன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் லோக்கல் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத். இவருக்கு பியூஷ்குமார் என்ற மகன் இருந்தார்.
 
இந்நிலையில் பியூஷ் நேற்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரின் வண்டியை வழிமறித்து தாக்கினர்.
 
உயிருக்கு பயந்து பியூஷ் ஓடினார். ஆனால் அவரை விரட்டிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள், அவரை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பியூஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பாஜக தலைவரின் மகன் படுகொலை செய்யப்பட்டது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments