Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை முட்டாள்தனமானது: ஆதாரை கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் கருத்து

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (02:01 IST)
இன்று இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படும் ஆதார் அட்டையை, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் என்பவர் கொண்டு வந்தார்.

ஆனால் ஆதார் அட்டை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய ஜெய்ராம் ரமேஷ், 'ஆதார் அட்டை என்பது முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளை ஒழிக்க மட்டுமே திட்டமிட்டதாகவும் கூறினார்.

ஆனால் தற்போது அதே ஆதார் அட்டையை விமான பயணச்சீட்டுகள் பெற, வங்கிக் கணக்குகள் தொடங்க, போன் இணைப்புகள் பெற உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதனை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments