Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி: மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரா?

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:04 IST)
பீகார் சட்ட மன்ற தேர்தல் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தது
 
இந்த நிலைய்ல் சற்று முன் வெளியான தகவலின்படி பாஜக கூட்டணியில் 135 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் பாஜக கூட்டணி தற்போது 131 இடங்களில் முன்னிலையில் இருப்பதால், முன்னிலையில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து விடும் என்பதும் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் இன்னும் 20 இடங்களுக்கும் கூடுதலாக முன்னிலை பெற்றால் ஆட்சி மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் கூறியபோது பீகாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் பற்றிய எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments