Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையைக் கடந்தது பிபர்ஜாய் புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் இல்லை..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:36 IST)
தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபர்ஜாய் புயல் தோன்றிய நிலையில் அந்த புயல் நேற்று இரவு கரையை கடந்தது. 
 
குஜராத் அருகே பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 
 
தாழ்வான பகுதியில்  இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் நேற்று நள்ளிரவில் குஜராத் மாநிலம் ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புயலால் பெரும் சேதம் ஏற்படும் என முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் குஜராத் கடலோர மாவட்டங்களில் எந்த விதமான உயிர் சேதமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தற்போது மீட்பு பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments