Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிலுக்குள் கட்டுக்கட்டா பணம்! – எண்ண முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:21 IST)
பீகாரில் போதை கடத்தல் தடுப்பு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் போதை பொருள் கடத்தல் அதிகமாக உள்ள நிலையில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மாநிலங்கள்தோறும் போதை பொருள் கடத்தல் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனால் போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரியே அதை வைத்து கோடிக் கணக்கில் பணம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜிதேந்திர குமார். இவரது வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஜிதேந்திர குமார் தனது கட்டிலின் கீழே பதுக்கி வைத்திருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் திணறும் வீடியோ வைரலாகியுள்ளது. கோடிக்கணக்கில் ஜிதேந்திர குமார் லஞ்ச பணம் சேர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments