Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 ஆண்டுகளாக கோவிலை காக்கும் முதலை! முதன்முறையாக தரிசனம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (18:04 IST)
கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் வாழ்ந்து வரும் முதலை முதன்முறையாக சாமியை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறது பபியா என்ற முதலை. பத்மநாபசுவாமி கோவிலின் காவலனாக கருதப்படும் இந்த முதலை இதுநாள் வரையிலும் அசைவம் சாப்பிட்டதில்லை என்று சொன்னால் பலர் வியப்பின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். குளத்தில் இருக்கும் மீன்களை கூட சாப்பிடாத இந்த முதலை குளத்திற்கு வரும் பக்தர்களையும் தாக்கியது கிடையாது.

பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் வழங்கும் நெய், பழங்கள் கலந்த உணவுதான் பபியாவுக்கு சாப்பாடு. கடந்த 70 ஆண்டுகாலமாக கோவில் குளத்தில் வாழ்ந்து வரும் பபியா இதுவரை ஒருதடவை கூட கோவில் சந்நிதி பக்கம் வந்ததில்லையாம். இந்நிலையில் திடீரென சந்நிதி பக்கம் கரையேறி வந்த பபியா சில நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் குளத்திற்கு சென்று விட்டதாக அங்கு பணிபுரியும் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். இது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments