Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ்

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:53 IST)
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முக்கிய போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி தேச நலனுக்கு எதிரானது என பாபா ராம்தேவ் அவர்கள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தற்போதுதான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி குறித்து பாபா ராம்தேவ் கூறியபோது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது, ராஷ்டிரிய தர்மத்திற்கு எதிரானது என்றும் பயங்கரவாதத்துடன் ஒருபோதும் நாம் கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பில் இருந்த நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..

முன்பதிவு இல்லா பெட்டியில் அதிக கூட்டம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமி..!

தமிழகத்தில் ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை! வனத்துறை முடிவுக்கு என்ன காரணம்?

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments