பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:32 IST)
தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த  நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி   வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட் பதிலளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
இந்த நிலையில்,  தனது மன்னிப்பை  ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து,  உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த  நிலையில், புதிய பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
 
நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தனது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்காதா? பயணிகள் அதிருப்தி..!

போட்டியின்றி தேர்வான தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்.. 6 பேர் யார் யார்?

கூரையை பிய்த்து கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த 10 கோடி லாட்டரி பரிசு..!

குடும்ப தலைவிகளுக்கு இன்று வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. முதல்வர் நடவடிக்கையால் மகளிர்கள் இன்ப அதிர்ச்சி..

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக்கணக்கில் பணம்.. பள்ளி, கல்லூரி படிப்புக்கும் திருமணத்திற்கும் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments