Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் புலிக்கும் மாட்டிறைச்சி தரக்கூடாது! – பூங்காவில் பாஜக தலைவர் போராட்டம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (10:50 IST)
அசாமில் புலிகளுக்கு மாட்டிறைச்சியை உணவாக தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் தலைமையில் சிலர் பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் குவாஹத்தி பகுதியில் விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு புலி, மான், சிங்கம் உள்ளிட்ட பல வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு மாட்டிறைச்சி நாள்தோறும் உணவாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மாநில பாஜக துணை தலைவர் சத்ய ரஞ்சன் போரா தலைமையிலான கூட்டம் ஒன்று பூங்காவின் வாயிலை மறைத்தவாறு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்களை வன விலங்குகளுக்கு உணவாக அளிக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வேறு இறைச்சியை விலங்குகளுக்கு அளிக்க வேண்டும் என போராட்டம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது ‘வன விலங்குகளுக்கு குறைந்த விலையில் அதிகமான இறைச்சி தேவை. மாட்டிறைச்சி மட்டுமே அவ்வாறு கிடைக்கிறது. மேலும் மாட்டிறைச்சியை விலங்குகளுக்கு வழங்க அரசாங்கத்தில் இருந்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை” என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments