திமுக இப்போதான் ஆரம்பிக்கிறாங்க.. நாங்கல்லாம் அப்போவே..! – ராமதாஸ் ட்வீட்

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (10:33 IST)
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக போராட்டம் நடத்தி வருவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாமதமான முடிவு என தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா பல்கலைகழக தரத்தை உயர்த்துவது குறித்து தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தன்னிச்சையாக செயல்படும் சுரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று இன்று திமுக தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. சுரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க” என்று கூறியுள்ளார்.

மேலும் “அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே... அது வரை சரி தான்!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments