Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன் 2 விண்கலம்: இரண்டாவது முறையாக புவிசுற்றுப்பாதை அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (08:08 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில் தற்போது சந்திராயன்-2 புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 45 ஆயிரத்து 475 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து தற்போது மீண்டும் சந்திரனின் புவி வட்டப் பாதை உயர்த்தப்பட்டுள்ளது
 
சந்திராயன்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தை தொட்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என்றும் இது இந்திய விண்வெளித் துறையின் ஒரு சிறப்பான மைல்கல் என்றும் அவர்கள் தெரிவித்தனர் 
 
இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலத்தின் மிகப்பெரிய வெற்றியை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments