Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்கும் வேலையை ராகுல் செய்கிறார் – அரவிந்த் கெஜ்ரிவால் !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (15:30 IST)
காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்காக டெல்லியில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘ ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது. உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் கட்சிகளுக்கு எதிராக தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதனால் மீண்டும் மோடி பிரதமரானால் அதற்கு காங்கிரஸும் ராகுல் காந்தியும்தான் காரணம். மன்மோகன் சிங் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் போராடினோம். ஆனால் அவர் மோடியை விட மேலானவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments