Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்கும் வேலையை ராகுல் செய்கிறார் – அரவிந்த் கெஜ்ரிவால் !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (15:30 IST)
காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்காக டெல்லியில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘ ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதைக்கிறது. உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் கட்சிகளுக்கு எதிராக தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதனால் மீண்டும் மோடி பிரதமரானால் அதற்கு காங்கிரஸும் ராகுல் காந்தியும்தான் காரணம். மன்மோகன் சிங் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் போராடினோம். ஆனால் அவர் மோடியை விட மேலானவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments