Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த கட்சியில் எவன் இருப்பான்..? திமுக தொண்டர்களை படு கேவலமாக பேசிய சீமான்

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (14:59 IST)
சீமான் பிரச்சாரத்தின் போது திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும், அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.  
 
வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.  
 
சமீபத்தில், சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் விஜய ராகவன் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் திமுகவில் யார் இருப்பார்கள் தெரியுமா என அக்கட்சி தொண்டர்கள் படு மோசமாக விமரித்துள்ளார். அவர் பேசியதாவது... 
கருணாநிதியின் மகன் என்பதை தாண்டி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு? கருணாநிதிக்கே தகுதி இல்லைன்னு சொல்றேன்.. இதுல மகனுக்கு என்ன தகுதி இருக்கு? ஸ்டாலின் என்ன ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினா? என்ன பிழைப்புக்காக நக்கி பிழைக்கிற கூட்டம் இல்லை நாங்கள். என் இன மக்களை பிழைக்க வைக்கிற புரட்சியாளர் கூட்டம் என பேசினார்.
 
அதோடு அந்த கட்சியில் சூடு, சொரணை இல்லாதவர், சோத்துல உப்பு போட்டு திண்ணாதவர், நல்ல தண்ணி குடிக்காதவர்.. இப்படித்தான் அங்க இருப்பாங்க என விமர்சித்துள்ளார். சீமானின் இந்த பேச்சு கடும் திமுகவினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments