Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்..! பிரதமர் மோடி தலைமையிலான குழுவினர் தேர்வு..!!

Senthil Velan
வியாழன், 14 மார்ச் 2024 (14:02 IST)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல்  திடீரென ராஜினாமா செய்தார். அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாகவுள்ளது.
 
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, கேரளாவைச் சேர்ந்த ஞானேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ALSO READ: பிரதமர் மோடி நாளை வருகை..! குமரியில் போக்குவரத்து மாற்றம்..!!
 
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தின்படி பிரதமர் தலைமையிலான  குழு இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான தேர்வுக் குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments