Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன் அண்ணா மாஸ்; ஜெகன் அண்ணா க்ளாஸ்... ஆந்திர அட்ராசிட்டி!!

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (19:25 IST)
ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி என்ன செய்தாலும் அதை ஆந்திர மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். எனவே அவரை வரவேற்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்ணவரம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். 
 
அப்போது விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் ஜெகனின் வாகனம் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளார். 
உடனே தன் வாகனம் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழி விடும்படி செய்துள்ளார். ஆம்புலன்ஸ் சென்ற 5 நிமிடத்திற்கு பிறகே அங்கிருந்து வாகனங்கள் நகர்ந்துள்ளது. 
 
ஜெகனின் இந்த செயல் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெகன் முதல்வராக இல்லாமல் ஆந்திர மக்களின் குடும்பங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். எனவே, அவர் என்ன செய்தாலும் அது வியக்கதக்க வகையில் பாரட்டை பெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments