Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரம் கனவு ஒருபோதும் பலிக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி..!

Mahdendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (17:59 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்த நிலையில் அவருடைய கனவு ஒரு நாளும் பலிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பிரச்சாரம் செய்த ப சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்

 1960 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்றும் மோடி பிரதமர் ஆனார் பின்னர் தான் அனைத்து மதங்களும் சமமாக பார்க்கப்பட்ட வேண்டும் தெரிவித்தார்

மேலும் ப சிதம்பரம் சிஏஏ சட்டத்தின் குறைபாடுகள் என்னென்ன என்பதை கூறவில்லை, மாறாக சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர் இவ்வாறு கூறிய நிலையில் அவருடைய கனவு ஒரு நாளும் பலிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்

சிஏஏ சட்ட சட்டத்தால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை என்றும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று கூறியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ப சிதம்பரம் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

Edited by Mahdendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேல்! - உறுதிப்படுத்திய நேதன்யாகு!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டு.. உடனே பதவியில் இருந்து விலகிய பாஜக பிரபலம்..!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments