Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்சலைட்டுகளுக்கு தக்க சமயத்தில் பதிலடி! – அமித்ஷா உறுதி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:34 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடி கொடுக்க இருப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் நக்சலைட்டுகல் தரப்பிலும் 12-20 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் “நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments