Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் நேர்மையான அதிகாரி அண்ணாமலை - அமித் ஷா

Advertiesment
Tamil Nadu Annamalai - Amit Shah
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (23:39 IST)
தமிழகத்தில் நேர்மையான அதிகாரி அண்ணாமலை தான் என அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.

இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரளமாஅ போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.கடைசி 2 நாட்கள் 21 மணி நேரம்கூடுதலாக பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கரூர் அரவக்குறிச்சித் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து,இன்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் ஒட்டுக் கேட்டபடி பேசிய அமித் ஷா, ஒட்டு தமிழ்நாட்டிலேயே நேர்மையான அதிகாரி என்றால் அது அண்ணாமலை தான்,..பாஜக , அதிமுக கூட்டணியில் வளர்ச்சியை யாராலும்தடுக்க முடியாது என்று கூறினார்.

இதற்கு முன் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலஜியை அடித்துவிடுவேன் என அண்ணாமலை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவச சிலிண்டரில் பிரியாணி…டிவி பார்க்கலாம் – நடிகை நமீதா