Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (07:35 IST)
அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற, தமிழ்நாடு உள்பட சில மாநில அதிகாரிகளுக்கு ₹2000 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அமெரிக்காவில் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கும் தொடர்பு உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதோடு, தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments