Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவுக்கு ஆப்பு வைத்த ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (08:17 IST)
வேறு நெட்வொர்க்குகளுக்கு பேசினால் இனி கட்டணம் என்றும், நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு ஆப்பு வைக்கும் வகையில் வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
டிசம்பர் 3ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு துறையின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுவதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் அறிவித்துள்ளன.
 
முன்னதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின என்பதும் இதனால் ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் ஏர்டெல்லின் இந்த அறிவிப்பை சமாளிக்க ‘ஆல் இன் ஒன்’ பிளான் மூலம் பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக ஜியோ அறிவித்துள்ளது. மொத்தத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியால் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments