Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! மும்பை அருகே பரபரப்பு..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:32 IST)
மும்பை அருகே பழுதடைந்த விமானத்தை லாரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில்  திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் லாரி டிரைவர் பாலத்தின் அடியில் எப்படி விமானம் உள்ள லாரியை ஓட்டு செல்லலாம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments