இந்தியாவில் விரிவுபடுத்தப்படும் ஏஐ பயன்பாடு: கூகுள் அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (07:55 IST)
இந்தியாவில் கூகுள் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் அங்கமான டீப் மைண்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு இயக்குனர் அபிஷேக் பாப்னா அவர்கள் கூறியுள்ளார்

ஏஐ டெக்னாலஜியின் பயன்பாடு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் டெக்னாலஜி புகுந்து விட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபிஷேக் பாப்னா கூறியுள்ளார் அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

இந்தியாவில் ஏஐ தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம். குறிப்பாக, மொழி, வேளாண் துறை ஆகிய இரண்டு துறைகளில் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் கூகுள் திட்டமிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மொழி மிக அவசியம் என்பதும், மொழி தடையால், ஒருவர் தன் மருத்துவப் பிரச்சினையை மருத்துவரிடம் விளக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments