Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மழையின் கோரப்பிடியில் மும்பை: வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (12:11 IST)
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை ஆரம்பித்திருப்பதால், கடந்த வாரம் 5 நாட்களுக்கு மழை விடாமல் பெய்தது. இந்த மழையால் மும்பை நகரம் முழுவதும் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. மேலும் ரத்னகிரி அருகே, திவாரே அணை உடைந்து, அதனைச் சுற்றியிருந்த 7 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியதில் பல வீடுகள் சேதமடைந்ததோடு பலரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பூனேவில் உள்ள ஒரு கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். குர்லா பகுதியில் குடிசை மீது சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியானார்கள். அதன்பிறகு மழை ஓரளவு குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

இந்நிலையில் நேற்று மும்பையில் மீண்டும் கனமழை பெய்தது. காலையில் தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மழை காரணமாக லாம்பாக் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கியதாக தகவல் வெளியானது.

இதுபோக நவி மும்பை, மற்றும் தானே ஆகிய பகுதிகளிலும், கனமழையால் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments