Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் ஒட்டுனரை தாக்கிய ஆப்பிரிக்க நாட்டினர் : டெல்லியில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 30 மே 2016 (18:45 IST)
கார் ஒட்டுனரை தாக்கிய ஆப்பிரிக்க நாட்டினர் மீதி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.


 

 
டெல்லியில் கால் டாக்சி டிரைவராக பணி புரிந்து வருபவர் நூருதீன். இவர் ராஜ்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில், அந்த பகுதியில் இருந்து துவாரகா என்னும் இடத்திற்கு செல்ல சிலர்  ‘ஓலா’ கால் டாக்சியை புக் செய்தனர்.  
 
அப்போது அங்கு நூருதீன் சென்றுள்ளார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அவரது காரில் ஏற முயன்றனர். ஆனால், டெல்லி போக்குவரத்து போலீசாரின் உத்தரவுப்படி நான்கு பேருக்கு மேல் ஏற்ற முடியாது என்று நூருதீன் கூறியுள்ளார்.
 
இதனால், கோபமடைந்த அவர்கள், நூருதீனை கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். இதனால், அவரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த ஆப்பிரிக்க நாட்டினரை தேடி வருகின்றனர்.

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments