Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் உதவி தேவைப்படுகிறது: பாஜக மத்திய அமைச்சர்

Webdunia
திங்கள், 30 மே 2016 (18:25 IST)
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனின் கோரிக்கையை மூன்று மாதத்தில் நிறைவேற்றப்படும் என பாஜக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.


 
 
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று அதன் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ராஜன் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏடிஎம் வசதி செய்து கொடுக்க வேண்டும், பள்ளிவிளை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 
இதனையடுத்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்த தொகுதி மட்டும் அல்ல மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சுரேஷ் ராஜன் மற்றும் அவரை சேர்ந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் ஒத்துழைத்தால் தான் மாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியும். சுரேஷ் ராஜன் தற்போது முன்வைத்த கோரிக்கைகள் 3 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments