Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்தை நெருங்கி தடாலென கவிழ்ந்த அதானி பங்குகள்! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:20 IST)
அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்று திடீரென பெரும் சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலமான அதானி நிறுவனத்தின் ஷேர் மார்க்கெட் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட அதானி பங்குகள் பெரும் ஏற்றத்தை சந்தித்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அதானி பங்குகள் வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் பலர் அதானி நிறுவனங்கள் மீது முதலீடு செய்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டு பங்கு முதலீடு நிதி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதானிக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 20% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அதானி குழுமம் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments