Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் கிஷோர் கே ஸ்வாமி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:18 IST)
இன்று காலை கைது செய்யப்பட்ட கிஷோர் கே ஸ்வாமி ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளார்.

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் பொருத்தும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇதனை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை கிஷோர் கே ஸ்வாமி கைதுசெய்யப்பட்டார் 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் கைதுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments