Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் என்னையும், என் சகோதரியையும் அந்த நபர் - மனம் திறக்கும் நடிகை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (12:03 IST)
தனக்கு 7 வயது இருக்கும் போது தனக்கும், தன் சகோதரிக்கும் ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்தார் என பாலிவுட் நடிகை பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.


 

 
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை தற்போது வெளிப்படையாகவும், தைரியமாகவும் வெளியே கூறி வருகின்றனர்.
 
அந்த வகையில், பாலிவுட் படங்கள் சிலவற்றில் நடித்தவரும், தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவரும் ஆன நடிகை மல்லிகா துவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 
நானும் அந்த பிரச்சனையை சந்தித்துள்ளேன்.  என்னுடைய காரில் என் அம்மா காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அந்த நபர் என்னுடைய ஸ்கர்ட்டு (பாவாடை) க்குள் கையை விட்டார். அப்போது எனக்கு வயது 7, என் சகோதரியின் வயது 11. அவரின் கை என்னுடைய மற்றும் என் சகோதரியின் பாவாடைக்குள் சென்று எல்லா இடத்திலும் பட்டது. அப்போது என் தந்தை மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார். இது தெரிந்த பின், என் தந்தை அந்த நபரின் தாடையை உடைத்தார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்